பரீட்சை திணைக்களத்தினால் அண்மையில் வெளியீடு செய்யப்பட்ட க.பொ.த உயர்தரப் பரீட்சை (2024) பெறுபேறுகளின் படி கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவி முஹம்மது நெளபர் பாத்திமா ஸப்றீன் உயர்தர உயிரியல் பிரிவில் அம்பாறை மாவட்டத்தில் முதல் நிலையை பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
கல்முனை பிறப்பிடமாக கொண்ட முஹம்மது நெளபர் பாத்திமா ஸப்றீன் அகில இலங்கை ரீதியில் 24ஆம் நிலையினையும் வெட்டுப்புள்ளி - 2.7617 யையும் பெளதிகவியல், இரசாயனவியல், உயிரியல் ஆகிய மூன்று பாடங்களிலும் அதி சிறப்பு "A" சித்தியினை பெற்றுள்ளதுடன் எஸ்.டி.எம். நெளபர், ஏ.எல்.எம். ரஹீமா ஆகியோரின் அன்பு புதல்வியும் ஆவார்.
மாவட்டத்தில் முதல் நிலை பெற்ற மாணவியின் திறமையை பாராட்டி வாழ்த்து தெரிவிக்கும் முதற்கட்ட நிகழ்வு கல்லூரி முதல்வர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் (SLEAS) தலைமையில் அதிபர் காரியாலயத்தில் இடம்பெற்றது.
அன்றைய தினம் உயர்தர பிரிவில் சிறந்த சித்திகளைப் பெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட உயிரியல் விஞ்ஞானம், பௌதீக விஞ்ஞானம், உயிரியல் முறைமைகள் தொழில்நுட்பம், வர்த்தகம், கலை பிரிவு மாணவிகளும் பிரசன்னமாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
க.பொ.த உயர்தர உயிரியல் பிரிவில் அம்பாறை மாவட்டத்தில் முதல் நிலையை பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்த பாத்திமா ஸப்றீன் அவரின் பெற்றோர்களுக்கும் கல்லூரி முதல்வர், பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், பகுதித் தலைவர்கள், வகுப்பாசிரியர்கள், பாட ஆசிரியர்கள், கல்லூரியின் ஆசிரியர்கள், மேலதிக கருத்தரங்குகள் கற்பித்த ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு உறுப்பினர்கள், பழைய மாணவிகள் சங்க உறுப்பினர்கள், கல்விசாரா ஊழியர்கள் மற்றும் நலன் விரும்பிகள், பெற்றோர்கள் அனைவரும் பாடசாலை சமூகம் சார்பாக நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டுள்ளனர்
No comments: