அம்பாறை மாவட்டத்தில் இயங்கும் ஒரே ஒரு முஸ்லிம் சிறுவர் பராமரிப்பு மையமான சம்மாந்துறை அஸ் ஸலாம் சிறுவர் அபிவிருத்தி மையத்தின் கட்டிட தேவையை நிவர்த்தி செய்யும் முகமாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்களின் டீ- 100 திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக ஒதுக்கீடு செய்யப்பட்ட சுமார் 40 லட்சம் ரூபாய் விசேட நிதி ஒதுக்கீட்டின் மூலம் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டிட அபிவிருத்தி பணிகளை கள விஜயம் செய்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்கள் ஆராய்ந்தார்.
சம்மாந்துறை அஸ் ஸலாம் சிறுவர் அபிவிருத்தி மையத்தை வழி நடத்தும் பெண்கள் நட்புறவு சமூக சேவைகள் அமைப்பின் நிர்வாகிகளையும், நிலையத்தின் முகாமையாளரையும் சந்தித்து சிறுவர் அபிவிருத்தி மையத்தின் அபிவிருத்திப் பணிகள், கல்வி மேம்பாட்டு விடயங்களை பற்றி கலந்துரையாடிய முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்கள் தனது நிதி ஒதுக்கீட்டில் நடைபெறும் வேலைத்திட்டங்களை பார்வையிட்டதுடன் அடுத்தகட்ட பணிகளுக்கு தேவையான ஒழுங்குகள் தொடர்பிலும் கலந்துரையாடினார். மேலும் அங்கு வாழ்ந்து வரும் சிறுவர்களை சந்தித்து அளவளாவிய முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்கள் அவர்களின் தேவைகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார்.
சம்மாந்துறை அஸ் ஸலாம் சிறுவர் அபிவிருத்தி மையத்தின் நிர்வாகி எம்.ஏ. அப்துல் ரஹீம், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்களின் வெகுஜன மக்கள் தொடர்பாடல் செயலாளர் யூ.எல். நூருல் ஹுதா உட்பட முன்னாள் எம்.பி ஹரீஸ் அவர்களின் இணைப்பாளர்கள், நிலையத்தின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்ட இந்த விஜயத்தின் போது இந்த சிறுவர் அபிவிருத்தி மையத்தின் வளர்ச்சி தொடர்பில் ஆராய்ந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்கள் வர்த்தகர்கள், செல்வந்தர்கள் தனது உதவிகளை மற்றும் நன்கொடைகளை இந்த சிறுவர் அபிவிருத்தி மையத்தின் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்ய முடியும் என்றார்.
இதன்போது சிறுவர் அபிவிருத்தி மையத்தின் தேவைகளை நிவர்த்திக்க பாராளுமன்ற உறுப்பினர் வழங்கிய ஒத்துழைப்புக்கும், தொடர்ச்சியான சேவைகளுக்கும் நிர்வாகத்தினர் நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்தார்கள்
No comments: