News Just In

4/22/2025 05:13:00 PM

கல்முனை இஸ்லாமாபாத் மகா வித்தியாலயத்தில் பாடசாலை கவின் கலைப் போட்டி 2025!

கல்முனை இஸ்லாமாபாத் மகா வித்தியாலயத்தில் பாடசாலை கவின் கலைப் போட்டி 2025


நூருல் ஹுதா உமர்

ஆசிரியர்கள், மாணவர்களின் கற்பித்தல், கற்றல் செயற்பாடுகளில் உளரீதியான மனப்பாங்குகளை மாற்றமடையச் செய்யும் நோக்குடன் வருடா வருடம் நடத்தப்படும் வகுப்பறைக் கவின் நிலை போட்டி கல்முனை இஸ்லாமாபாத் மகா வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் ஏ.ஜீ.எம்.றிசாத் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

கல்முனை கல்வி வலயத்தின் ஆரம்ப பிரிவு கவின் கலை போட்டி விதிமுறைகளுக்கு அமைவாக தரம் 1 தொடக்கம் தரம் 5 வரை நடைபெற்ற இப்போட்டியில் பாடசாலையின் ஆரம்பப் பிரிவு ஆசிரிய ஆலோசகர் ஐ.எல்.அப்துல் ரஹ்மான், ஆரம்பப் பிரிவு வளவாளர் எம்.எம்.ஏ.ஹபீழ் ஆகியோர் பார்வையிட்டு மதிப்பீடுகளில் ஈடுபட்டனர்.

மேலும் பாடசாலையின் கவின்கலை போட்டி இணைப்பாளர்களான ஆசிரியர் எம்.சீ.ஹிஜாஸ், ஆசிரியர் ஏ.ஆர். பைறூஸ் கான் ஆகியோரின் நெறிப்படுத்தல், மற்றும் ஒருங்கிணைப்பிலும் இந்நிகழ்வு நடைபெற்றது. பாடசாலையின் பிரதி அதிபர் எம்.ரீ.ஏ.முனாப், மற்றும் பாடசாலை முகாமைத்துவ குழு வின் சிரேஷ்ட ஆசிரியர் திரு. முஜிப்டீன் ஆகியோர் இணைந்து இந் நிகழ்வை ஆரம்பித்து வைத்தது குறிப்பிடத்தக்கது

No comments: