News Just In

3/07/2025 07:31:00 PM

உள்ளூராட்சி தேர்தலுக்கு கட்டுப் பணம் செலுத்திய அரசியல் கட்சிகள்!

உள்ளூராட்சி தேர்தலுக்கு கட்டுப் பணம் செலுத்திய அரசியல் கட்சிகள்!




எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக இதுவரை கட்டுப்பணம் செலுத்திய அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் குறித்து தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கடந்த 03ஆம் திகதி ஆரம்பமான கட்டுப்பணம் பெறும் செயல்முறையின்படி, நேற்று (06) மாலை 4.15 வரையிலான காலப்பகுதியில் 88 உள்ளூராட்சி நிறுவனங்களுக்காக கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட 10 அரசியல் கட்சிகளும் 38 சுயேட்சைக் குழுக்களும் அந்த 88 உள்ளூராட்சி நிறுவனங்களுக்காக கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

No comments: