News Just In

3/15/2025 10:23:00 AM

கல்முனை அல்- அஸ்கர் வித்தியாலய வருடாந்த இப்தார் வைபகம் !

கல்முனை அல்- அஸ்கர் வித்தியாலய வருடாந்த இப்தார் வைபகம் !



மாளிகைக்காடு செய்தியாளர்
கல்முனை கல்வி வலய கல்முனை கமு/கமு/ அல்- அஸ்கர் வித்தியாலய வருடாந்த இப்தார் வைபகம் பாடசாலை அதிபர் ஏ.எச். அலி அக்பர் தலைமையில் பாடசாலை கேட்போர் கூடத்தில் (14) நடைபெற்றது.
இந்நிகழ்வின் விசேட ரமழான் சிந்தனையையும், மார்க்க சொற்பொழிவையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கல்முனை கிளைத்தலைவர் அஷ்ஷேய்க் ஏ.எல்.எம்.முர்ஷித் முப்தி ( ஸஃதி, நஜ்மி) நிகழ்த்தினார்.
மேலும் இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை பொறியியலாளர் எந்திரி ஜௌஸி அப்துல் ஜப்பார், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினரும், கல்முனை சட்டத்தரணிகள் சங்க முன்னாள் செயலாளருமான சிரேஷ்ட சட்டத்தரணி ரோஷன் அக்தர், கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு முன்னாள் உறுப்பினரும், அல்- மீஸான் பௌண்டஷன் தவிசாளருமான யூ.எல்.என். ஹுதா உமர், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழுவினர், பாடசாலை பழைய மாணவர்கள், பாடசாலை முகாமைத்துவ குழுவினர், பாடசாலை ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர், பிரதேச பிரமுகர்கள், கல்விமான்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

No comments: