இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 77வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு சுதந்திர தின விசேட நிகழ்வு 'தேசிய மறுமலர்ச்சிக்காக அனைவரும் அணி திரள்வோம்' என்ற தொனிப்பொருளில் கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் இன்று (04) காலை இடம்பெற்றது.
நம்பிக்கையாளர் சபையின் தலைவர் அல்ஹாஜ் எம். ஐ. அப்துல் அஸீஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இவ் நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் சட்டத்தரணி அஷ்ஷேஹ் டி.எம்.எம். அன்ஸார் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி விசேட குறிப்புரையை ஆற்றினார்.
இதனைத் தொடர்ந்து நாட்டு மக்களின் அமைதிக்கும், சகவாழ்வுக்கும், பரஸ்பரத்திற்கும் மற்றும் தேசிய மறுமலர்ச்சிற்குமாக விசேட துஆ பிரார்த்தனை நம்பிக்கையாளர் சபையின் பிரதித் தலைவர் அஷ்ஷேஹ் மௌலவி ஏ. ஆர். சபா முஹம்மத் நஜாஹி அவர்களால் முன்னெடுக்கப்பட்டது.
நிகழ்வில் அக்கரைப்பற்று உதவி பிரதேச செயலாளர் முஹம்மத் ராசித் அவர்கள், அக்கரைப்பற்று பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் முஹம்மட் தமீம், கல்முனை பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் முஹம்மட் ஜௌபர், கல்முனை சமுர்த்தி தலைமை பீட முகாமையாளர் முஹம்மத் சாலிஹ், கல்முனை பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர் முஹம்மட் யாசின்பாவா, அக்கரைப்பற்று பிரதேச செயலக சிரேஷ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் யூ.எல்.முஹம்மட் ஆகிர், கல்முனை பிரதேச செயலக கலாசார திணைக்கள உத்தியோகத்தர் முக்தார் ஹுசைன் மற்றும் கண்ணியத்திற்குரிய உலமாக்கள், ஜமாஅத்தார்கள், பொதுமக்கள், நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
No comments: