News Just In

1/18/2025 12:05:00 PM

மட்டக்களப்பு வாவியில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு வாவியில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு


மட்டக்களப்பு நகர் வாவியில் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் அடையாளம் காணப்படாத பெண்ணொருவரின் சடலம் இன்று சனிக்கிழமை (18) காலை 10 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

கல்லடி பாலத்துக்கு அருகாமையிலுள்ள முனிச் விக்டோரியா நட்புறவு வீதியிலுள்ள வாவிக்கரையில் நீரில் மூழ்கிய நிலையில் சடலம் கரையை அடைந்ததை கண்ட பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல நீதிமன்றத்தின் அனுமதியை பெறும் நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: