News Just In

1/17/2025 03:39:00 PM

இன்று நள்ளிரவு முதல் 20 சதவீதத்தால் மின்கட்டணம் குறைப்பு!

இன்று நள்ளிரவு முதல் 20 சதவீதத்தால் மின்கட்டணம் குறைப்பு!





சராசரியாக 20 சதவீதத்தால் மின்கட்டணத்தை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்த கட்டண திருத்தம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரவுள்ளதாக அதன் தொடர்பாடல் பிரிவு பணிப்பாளர் ஜயனாத் ஹேரத் தெரிவித்துள்ளார்.

வீட்டுப் பிரிவின் கீழ் 0-30 வரையிலான அலகுகளுக்கான கட்டணம் ரூ.6 ஆக இருந்ததை ரூ.4 ஆகவும், 31-60 வரையிலான அலகுகளுக்கான கட்டணம் ரூ.9 இல் இருந்து ரூ.10 ஆகவும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, முதல் ஆறு மாதங்களுக்கு புதிய கட்டண திருத்ததின் கீழ், கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments: