News Just In

12/08/2024 03:47:00 PM

மாவட்ட இலக்கியப் போட்டித் தொடரில் வெற்றியீட்டியவர்களுக்கான பாராட்டும் நிகழ்வு

மாவட்ட இலக்கியப் போட்டித் தொடரில் வெற்றியீட்டியவர்களுக்கான பாராட்டும் நிகழ்வு


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

மாவட்ட இலக்கியப் போட்டித் தொடரில் வெற்றியீட்டியவர்களைப் பாராட்டுவதற்காக மாவட்ட செயலகமும் கலாசார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்த நிகழ்வு மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வின் பிரதம அதிதியாக மாவட்டச் செயலாளர் ஜஸ்டினா ஜுலேகா கலந்து கொண்டார்.

நிகழ்வில் பாடல் இசைத்தல், இலக்கிய விமர்சனம், சிறுகதையாக்கம், பேச்சு, நடனம், கவிதை, கட்டுரை ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் கலைஞர்களுக்கும் பரிசில்களும் கௌரவிப்பும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நவரூபரஞ்ஜினி முகுந்தன், கிழக்கு மாகாண கலாசார பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி. வாசுதேவன், பதவி நிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட கலாசார உத்தியோகத்தர்களான எம்.எ.சி. ஜெய்னுலாப்தீன் உட்பட உத்தியோகத்தர்கள், மாணவர்களும், பெற்றோரும் கலந்து கொண்டனர்.அங்கு கருத்துத் தெரிவித்த மாவட்டச் செயலாளர் ஜஸ்டினா ஜுலேகா, கலை, கலாசார, இலக்கியம் தொடர்பான போட்டிகளின் சிறார்களை பங்கேற்கச் செய்வதன் மூலம் அவர்களின் ஈடுபாட்டை அதிகரிக்க முடிவதுடன் தேசிய மட்டத்திலும் இவர்கள் வெற்றி பெற வாய்ப்பு ஏற்படும்” என்றார்

No comments: