News Just In

3/30/2026 06:15:00 AM

ஈரானின் இருதயத்தில் ஆட்டம் காட்டிய வல்லரசுக்கள்! வரலாறு காணாத அளவில் சரமாரியாக வீசப்பட்ட ஏவுகணைகள்

ஈரானின் இருதயத்தில் ஆட்டம் காட்டிய வல்லரசுக்கள்! வரலாறு காணாத அளவில் சரமாரியாக வீசப்பட்ட ஏவுகணைகள்


மத்திய கிழக்கு போர்க்களத்தில் கடந்த 24 மணிநேரத்தில் வரலாறு காணாத அளவிற்கான வான்வழித் தாக்குதல்கள் ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மீது நடத்தப்பட்டுள்ளன.

சுமார் 150க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் ஒன்றிணைந்து 120க்கும் அதிகமான அதிநவீன ஏவுகணைகளை வீசி ஈரானின் முக்கிய இராணுவக் கட்டமைப்புகளைச் சிதைத்துள்ளன.

ஈரானின் இராணுவப் பலத்தை முடக்கும் நோக்கில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் முக்கிய இடங்கள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன:

பாலிஸ்டிக் ஏவுகணை உற்பத்தி மையம் - ஈரானின் நீண்டதூர ஏவுகணைகளுக்குத் தேவையான முக்கிய பாகங்களை உருவாக்கும் அதிமுக்கிய தளம் தகர்க்கப்பட்டது.

IRGC-இன் ஆராய்ச்சி மையம் - ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையினரால் (IRGC) ஏவுகணை அமைப்புக்கள் மற்றும் செயற்கைக்கோள் ஏவுகணைகளை (Satellite Launchers) மேம்படுத்தப் பயன்படுத்தப்பட்ட தளம் இலக்கு வைக்கப்பட்டது.

ஆயுத உற்பத்தி தளம் - இராணுவ ஆராய்ச்சி மற்றும் அதிநவீன ஆயுதங்களை உற்பத்தி செய்யும் தளம் முற்றாக அழிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தெஹ்ரான் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இரவு முழுவதும் வானம் அதிரும் வகையில் தாக்குதல்கள் தொடர்ந்தன.

ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள் பல ஏவுகணைகளைத் தடுத்ததாகக் கூறினாலும், முக்கிய இராணுவ மையங்கள் பாரிய சேதங்களைச் சந்தித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தாக்குதல், ஈரானின் ஏவுகணைத் தொழில்நுட்பத்தை பல ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளியுள்ளதாக இராணுவ ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

No comments: