News Just In

12/10/2024 06:38:00 PM

மாவடிப்பள்ளி அஷ்ரப் மகா வித்தியாலய மாணவர்களுக்கு புதிய தலைமுறை கழகத்தினால் பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு.!

மாவடிப்பள்ளி அஷ்ரப் மகா வித்தியாலய மாணவர்களுக்கு புதிய தலைமுறை கழகத்தினால் பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு.!



மாளிகைக்காடு செய்தியாளர்

கல்முனை கல்வி வலய மாவடிப்பள்ளி கமு/கமு/அல்- அஷ்ரப் மகா வித்தியாலயத்தில் பெற்றோர்களை இழந்த மாணவர்களுக்கு கல்வியின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் புதிய தலைமுறை கழகத்தினால் பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு மாவடிப்பள்ளி கமு/கமு/அல்- அஷ்ரப் மகா வித்தியாலய அதிபர் ஏ.எல்.ரஜாப்தீன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷரஃப் அவர்களின் ஆலோசனைக்கிணங்க புதிய தலைமுறை கழகத்தின் மாவடிப்பள்ளி செயற்பாட்டாளர்களினால் பெற்றோர்களை இழந்த பாடசாலை மாணவர்களுக்கு ஒரு தொகுதி உபகரணங்கள் அதிபர், ஆசிரியர்களிர்களிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதி அதிபர், பகுதி தலைவர்கள், ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பயிற்சி ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் மற்றும் உறுப்பினர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர். இதன் போது மாவடிப்பள்ளி கல்வி சமூகமும் பெற்றோரும் ஆசிரியர்களும் மாணவர்களும் இவ்வாறான உதவும் கரங்களுக்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

No comments: