News Just In

12/26/2024 08:04:00 PM

திருமலை மீடியா போரத்தினால் ஊடக விருது!

திருமலை மீடியா போரத்தினால் ஊடக விருது!


அபு அலா
திருகோணமலை மீடியா போரத்தின் 5வது வருட பூர்த்தி விழாவும், ஊடகவியலாளர்கள் கெளரவிப்பும் போரத்தின் தலைவர் எச்.எம்.ஹலால்தீன் தலைமையில் கிண்ணியா நகரசபை மண்டபத்தில் (25) இடம்பெற்றது.

இவ்விழாவுக்கு கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்தார்.

மேலும், கிண்ணியா நகரசபை செயலாளர் முகம்மது அனீஸ், கிண்ணியாவை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட எம்.வி.எம்.பெளண்டேஷன் உரிமையாளர் எம்.வி.எம்.பெளமி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இதன்போது, கடந்த பல வருடங்களாக ஊடகத்துறைக்கு பெரும் பங்காற்றிய சிரேஷ்ட ஊடகவியலாளர் பைஷல் இஸ்மாயில் உள்ளிட்ட ஊடகவியலாளர்களுக்கு ஊடகர் விருதுடன் சான்றிதழ்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

மேலும், மாவட்டத்திலும்,பிரதேசத்திலும் நடக்கின்ற நிகழ்வுகள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் தொடர்ச்சியாக வழங்கி வந்த ஊடகவியலாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி, தங்கப் பதக்கம் அணிவிக்கப்பட்டு சமூக தாரகை விருது வழங்கி கெளரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இவ்விழாவில் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற சிறார்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.

No comments: