News Just In

9/24/2024 01:26:00 PM

ஏறாவூர் யங் அல் பத்தாஹ் விளையாட்டுக்கழகம் சம்பியனானது!

ஏறாவூர் யங் அல் பத்தாஹ்விளையாட்டுக்கழகம் சம்பியனானது


(அஸ்ஹர் இப்றாஹிம்)
ஏறாவூர் ஆத்தாங்காரை வாரியர்ஸ்விளையாட்டுக்கழகத்தால் நடாத்தப்பட்ட 8 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் ஏறாவூர் யங் அல் பத்தாஹ் அணி சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

காலிருதி ஆட்டத்தில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி. அணியினரையும்
அரை இறுதி ஆட்டத்தில் ஏறாவூர் மக்காமடி வொறியர்ஸ் அணியினரையும் இறுதிப் போட்டியில் ஏறாவூர் ஆத்தாங்கரை வொறியர்ஸ் அணியினரையும் வெற்றி கொண்டு தொடர்ச்சியாக இவ் வருடதுக்கான மூன்றாவது சம்பியன் கிண்ணத்தையும் தனதாக்கிக் கொண்டது.

No comments: