News Just In

8/17/2024 10:54:00 AM

சிறுவர் மெய்வல்லுனர் போட்டியில் அனைத்து வயதுப்பிரிவுகளிலும் சாதித்து காட்டிய காத்தான்குடி மீரா பாலிகா தேசியக் கல்லூரி!





(அஸ்ஹர் இப்றாஹிம்)
காத்தான்குடி கோட்டத்திற்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான சிறுவர் மெய்வல்லுனர் போட்டி நிகழ்ச்சிகளில் காத்தான்குடி மீரா பாலிகா தேசிய கல்லூரி கூடுதலான வெற்றிகளை பெற்று வலய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வெற்றியை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவ மாணவிகளுக்கும் இவ்வெற்றிக்கு வழி வகுத்த அதிபர், பாடசாலை நிர்வாகம், உடற்கல்வி ஆசிரியர்கள்,விளையாட்டு பயற்றுவிப்பாளர், ஆரம்ப பிரிவு பகுதித் தலைவர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் பாடசாலை கல்வி சமூகம் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளது.

No comments: