தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த முடியுமா? – அது சாத் தியமா? இவ்வாறான கேள்விகளுக்கு மத்தியில் கடந்த ஏழு மாதங்களுக்கு மேலாக சிவில் சமூக அமைப்புகள் பல ஒன்றிணைந்து முன்னெடுத்த முயற்சி தற்போது வெற்றிபெற்றுள்ளது. பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களில் ஒருவரான ரணில் விக்கிரமசிங்ககூட ‘உங்களால் ஒரு பொது வேட்பாளரை நிறுத்த முடியாது’, என்று கூறி கொடுப்புக்குள் சிரித்துச் சென்றார். ஆனால், பலரும் புருவத்தை உயர்த்தும் வகையில் அது சாத்தியப்பட்டிருக்கின்றது. முள்ளிவாய்க்காலுக்கு பின்னரான கடந்த பதினைந்து வருடங்களில் ஒப்பீட்டடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பிரதான அரசியல் நகர்வாக இதனைக் குறிப்பிட முடியும்.
இதேவேளை, ஒப்பீட்டடிப்படையில் ஆகக் கூடிய தமிழ்த் தேசிய கl;சிகளை ஒரு நேர்கோட்டில் சந்திக்கச் செய்திருப்பதும் இதுதான் முதல்தடவை. இலங்கை தமிழ் அரசுக் கட்சி தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்புக்குள் இணைந்து கொள்ளாதுவிட்டாலும்கூட, கட்சியின் பெரும்பான்மையினர் தமிழ்ப் பொது வேட்பாளர் நிலைப்பாட்டை ஆதரிக்கின்றனர்
No comments: