News Just In

12/17/2025 08:22:00 PM

பிள்ளையானின் சகா குவைத்தில் இருந்து வந்தவர் இன்று கைது..!

 பிள்ளையானின் சகா குவைத்தில் இருந்து வந்தவர் இன்று கைது..!


சிஜடிஆ ல் தேடப்பட்டு வந்த பிள்ளையானின் சகாவான அஜித் என்பவரை மட்டக்களப்பு கொண்டையங்கேணியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இன்று (17.12.2025) கொழும்பில் இருந்து சென்ற குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் (சிஜடி) குறித்த நபரை கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடந்த 2006 டிசம்பர் 15ஆம் திகதி கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சி.சந்திரகாந்தன் சிஐடியினரால் மட்டக்களப்பில் உள்ள அவரது காரியாலயத்தில் வைத்து கடந்த ஏப்ரல் 8ஆம் திகதி கைது செய்யப்பட்டார்

No comments: