(அஸ்ஹர் இப்றாஹிம்)
மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ஸெய்யிட் அலி ஸாஹிர் மெளலான இன்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்ஹவை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.
கட்சிதாவினார் எனும் குற்றச்சாட்டின் கிழ் நீதிமன்ற அனுமதியின் பிரகாரம் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் பதவி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு அலிஸாஹிர் மெளலானா அண்மையில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா மற்றும் ஈஸ்டர் தாக்குதல் காலங்களின் போது முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட அநீதம் மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிராக தனி ஒருவராக நின்று குரல்கொடுத்து பல பணிகள் ஆற்றியவர் அலிஸாஹிர் மெளலானா என்பது குறிப்பிடத்தக்கது.
No comments: