(அஸ்ஹர் இப்றாஹிம்)
மருதமுனை ஸம்ஸ் மத்திய கல்லூரியில் தரம் 6 மாணவர்கள் தமது வாழ்க்கைத் திறன் [PTS] பாடத்தில் நான்காவது அலகில் வணிக நடவடிக்கை தொடர்பாக பாடப்பரப்பில் மாணவர்களின் செயற்பாடுகளை செயல்படுத்தும் நோக்கில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த சிறுவர் சந்தை பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது.
கல்லூரி அதிபர் எம்.எஸ்.எம்.பைஸால் பிரதம அதிதியாக கலந்து கொண்ட மேற்படி நிகழ்வில் பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள்,வலய அதிபர்கள், பகுதி தலைவர்கள், வகுப்பு ஆசிரியர்கள், ஏனைய ஆசிரியர்கள், ஏனைய வகுப்பு மாணவ மாணவிகள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
No comments: