திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தேசிய காங்கிரஸ் தேசிய தலைவருமான ஏ.எல்.எம். அதாவுல்லா அவர்களது நிதி ஒதுக்கீட்டில் தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளர் டொக்டர் முஹம்மட் ஷியா அவர்களது சிபாரிசின் பேரில் மூதூர் அல் முபஷ்ஷிரா பாலர் பாடசாலை சிறார்களுக்கான கற்பித்தல் உபகரணத் தொகுதி மற்றும் அதனோடு சேர்ந்த இதர சில பொருட்களும் அண்மையில் கையளிக்கப்பட்டன.
இந் நிகழ்வானது தேசிய காங்கிரஸ் கட்சியின் மூதூர் கிளை உறுப்பினர்கள் ஊடாக சிறப்பான முறையில் ஒழுங்கு படுத்தப்பட்டு
டொக்டர் முஹம்மட் ஷியா, முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான சுக்ரி, ரிம்சான் , மூதூர் பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் எம்.எம்.ஹரீஸ் மற்றும் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் பங்குபற்றுதலுடன் மூதூர் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.
No comments: