News Just In

7/03/2024 01:31:00 PM

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் இரா.சம்பந்தனிற்கு மட்டக்களப்பு பட்டிப்பளையில், அஞ்சலி!





இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் இரா.சம்பந்தனின், ஆத்ம சாந்தி வேண்டி, கட்சியின் மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேசக் கிளையின் ஏற்பாட்டில் அஞ்சலி நிகழ்வு நேற்று ஒழுங்குபடுத்தப்பட்டது.

தீபச் சுடர்கள் ஏற்றப்பட்டு, மலர் தூவி அஞ்சலிக்கப்பட்டது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேந்திரன் மற்றும் ஞா.ஸ்ரீநேசன் ஆகியோர் கலந்து கொண்டதுடன் கட்சியின் வட்டார கிளை தலைவர், செயலாளர், பொருளாளர்,இளைஞர் அணி மற்றும் உறுப்பினர்களும் அஞ்சலி செலுத்தினர்

No comments: