News Just In

7/07/2024 04:19:00 PM

திருகோணமலையில் குவிக்கப்பட்டுள்ள இராணுவம்: பலப்படுத்தப்படும் பாதுகாப்பு!





தமிழ் தேசிய கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்மந்தனின் இறுதி கிரியை நிகழ்வில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பாரதிய ஜனதா கட்சி தமிழக தலைவர் அண்ணாமலை பங்கேற்கவுள்ள நிலையில் திருகோணமலையில் பலத்த பாதுகாப்பு முன்னனெடுக்கப்பட்டுள்ளது.இன்னும் சற்று நேரத்தில் ஜனாதிபதி அவர்களும் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து திருகோணமலை நகர் முழுதும் குறித்த பாதுகாப்பு பணியை முன்னெடுத்துள்ளனர்.

சம்பந்தன் அவர்களின் இறுதி கிரிகைகளுக்கு மக்களை ஏற்றுவதற்காக கிழக்கு மாகாண பேருந்து சாலைகளில் இருந்து பேருந்துகளை கிழக்கு மாகாண சபை தயார் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இராஜவரோதயம் சம்மந்தனின் இறுதி கிரியைகள் திருகோணமலையில் உள்ள இந்து மயானத்தில் இன்று(07) மாலை நடைபெறவுள்ளது.

குறித்த இறுதி கிரியை நிகழ்வுக்கான ஏற்பாடுகள் இடம் பெற்று வருவதுடன் பெருந்திரளான மக்கள் அஞ்சலி செலித்தியும் வருகின்றனர்.

அரசியல் பிரமுகர்கள், முப்படைகளின் உயரதிகாரிகள், என பலரும் திருகோணமலையில் உள்ள அன்னாரது இல்லத்தில் பூதவுடல் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது.

இறுதி கிரியைக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பாரதிய ஜனதா கட்சி தமிழக தலைவர் அண்ணாமலை பங்கேற்கவுள்ள நிலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மேலும், திருகோணமலை நகர் முழுதும் இரங்கல் தெரிவித்து இரா. சம்மந்தனின் உருவப்படம் பொறித்த பதாகைகள் தொங்கவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் தென்னிலங்கையை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள், வடகிழக்கு மலையகத்தை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் என பலரும் மேலும் கலந்து கொள்ளவுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை உடல் நலக்குறைவு காரணமாக கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அமரர் இரா. சம்பந்தன் இயற்கை எய்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது

No comments: