News Just In

7/16/2024 02:25:00 PM

ஜனாதிபதி புலமைப் பரிசில்:மட்டக்களப்பிலிருந்து ஆயிரத்து 771 மாணவர்கள் தெரிவு!




ஜனாதிபதி புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து ஆயிரத்து771மாணவர்கள்புலமைப்பரிசிலினைப்பெற்றுக்கொள்ளதகுதிபெற்றுள்ளனர்.ஜனாதிபதிரணில்விக்ரமசிங்கவின்எண்ணக்கருவிற்கமைய,பொருளாதார ரீதியில் பின்னடைவை எதிர்நோக்கும் ஒருஇலட்சம்மாணவர்களுக்கும், உயர்தரப்பிரிவில்கல்விகற்கும்6ஆயிரம்மாணவர்களுக்கும்புலமைப்பரிசில்திட்டமொன்றுஅறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
தரம் ஒன்று முதல் 11 வரை கல்வி கற்கும் மாணவர்களில் ஆயிரத்து 471 மாணவர்களும், உயர்தரத்தில் கல்வி கற்கும் 300 மாணவர்களும் மட்டக்களப்பிலிருந்து தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

அபிவிருத்தி லொத்தர் சபையின் அனுசரணையில், மாவட்ட அரசாங்க அதிபர் ஐஸ்டினா முரளிதரனின் ஒழுங்கமைப்பில், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இராஜாங்க அமைச்சர்களான சிவநேசதுரை சந்திகாந்தன், சதாசிவம் வியாழேந்திரன் ஆகியோர் தலைமையில் மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மைதானத்தில் நிகழ்வு நடைபெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர்களான ஏ.எல்.எம்.அதாவுல்லா, அலி சாகிர் மௌலானா மற்றும கிழக்கு மாகாண கல்வித் திணைக்கள. அதிகாரிகள் ,பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் , மாணவர்கள் என பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்

No comments: