
வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் ஆடி வேல்விழாவை ஒட்டிய பாதயாத்திரை வரலாறு காணாத வகையில் இம்முறை களைகட்டி உள்ளது.
இதுவரை 25,000 மேற்பட்ட பாதயாத்திரிகர்கள் கானகத்தினுள் பிரவேசித்து இருக்கின்றார்கள்.
கடந்த 30ஆம் தேதி முதல் நாள் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் கானகப் பாதை திறந்து வைக்கப்பட்டது. அன்றைய தினம் சுமார் 7000 அடியார்கள் கானகத்தில் பிரவேசித்தனர். கடந்த ஆறு நாட்களாக பயணித்து நேற்றும் முன்தினமும் கருகாமத்தை சுமார் 5000 அடியார்கள் வந்தடைந்தனர்.
No comments: