News Just In

6/07/2024 07:00:00 PM

மட்டக்களப்பு காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலையிலிருந்து, பல்கலைக்கழத்திற்குத் தெரிவுசெய்யப்பட்ட மாணவிகளுக்குக் கௌரவிப்பு




மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்துக்குட்பட்ட காத்தான்குடி மீராபாலிகா தேசிய பாடசாலையிலிருந்து, பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 102 மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

மீரா பாலிகா தேசிய பாடசாலை அதிபர் யூ.எல். மன்சூர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதிஎம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் பங்கேற்றார்.

பல் கலைக் கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவிகள் மாலை அணிவிக்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டனர். மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எம். அப்துல் ஜவாத் உள்ளிட்ட கல்வியாளர்கள், முக்கியஸ்தர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

No comments: