News Just In

6/21/2024 06:26:00 PM

ஐஸ் போதைப் பொருளுடன் கைதான முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தரின் மகனுக்கு தடுப்புக்காவல்!





மணித்தியாலங்கள் தடுப்புக்காவலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பகுதியில் உள்ள விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற புலனாய்வு தகவல் ஒன்றிற்கமைய கடந்த புதன்கிழமை இரவு குறித்த சந்தேக நபரை கல்முனை மத்ரஸா வீதிக்கு அருகில் வைத்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபர் வசம் இருந்து 5 கிராம் 80 மில்லி கிராம் பெறுமதியுடைய ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரின் தந்தை ஒய்வு பெற்ற முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நேற்றைய தினம் கல்முனை தலைமையக பொலிஸாரிடம் விசேட அதிரடிப்படையினர் சட்ட நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டார்.

இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட சந்தேக நபரை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து 72 மணித்தியாலங்கள் சந்தேக நபரை தடுத்துவைத்து விசாரணை மேற்கொள்ளுமாறு நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

No comments: