News Just In

6/13/2024 05:01:00 PM

எம்.பிக்களின் நிதி ஒதுக்கீட்டில்,மட்டு.காத்தான்குடியில் பொது நிறுவனங்களுக்கு உபகரணங்கள்!




நாடாளுமன்ற உறுப்பினர்களான அலி சாஹீர் மௌலானா மற்றும் ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் ஆகியோரது நிதியொதுக்கீட்டில் மட்டக்களப்பு காத்தான்குடியிலுள்ள பாடசாலைகள் மற்றும் பொது நிறுவனங்களுக்கான உப கரணங்கள் தள பாடங்கள் இன்று வழங்கப்பட்டன.

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹீர் மௌலானாவின் நிதியொதுக்கீட்டிலிருந்து 7 நிறுவனங்களுக்கும், காத்தான்குடி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ்வின் நிதியொதுக்கீட்டில் 3 நிறுவனங்களுக்கும் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
நாடாளுமன்ற உறுப்பினர்களான அலி சாஹீர் மௌலானா மற்றும் ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் ஆகியோர் நேரில் உபகரணங்களை கையளித்தனர்.
நிகழ்வில் காத்தான்குடி பிரதேச செயலாளர் உதய சிறீதர் உட்பட பிரதேச செயலக அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

No comments: