ஜனாதிபதி|பாராளுமன்ற பதவிக்காலம் இரண்டையும் நீடிக்க ஆலோசனை
பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டுபெரும்பான்மையை மாத்திரம் பெற்று
சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லாமல்பாராளுமன்றத்தினதும் மற்றும் ஜனாதிபதியினதும் சேவை காலத்தை நீடிக்க முடியுமா என சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெற அரச தரப்பு தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
உரிய காலத்தில் ஜனாதிபதி தேர்தலைநடத்துவதாக அரசாங்கத்தரப்பு தரப்பு கூறி வந்தாலும் அரசியலமைப்பிலுள்ள அனுகூலங்கள் மற்றும் வேறு வழிகளை பயன்படுத்தி ஜனாதிபதி தேர்தலையும் பொது தேர்தலையும் ஒத்திவைக்க திரை மறைவில் காய் நகர்த்தல்களை மேற் கொள்ளப்பட்டு வருவதாகஅத்தகவல்கள் தெரிவிக்கின்றன....
இதற்கிணங்க இம்முயற்சிகள் மூலம் பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை மாத்திரம் பெற்றுசர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லாது இவற்றின் கால நீடிப்பை பெற முடியுமா என சட்டமா அதிபரிடம் ஆலோசனை
பெறுவதற்கான முயற்சி மேற்கொள்ளபடலாம் எனவும் எதிர்வு கூறப்படுகிறது
கடந்த நல்லாட்சியின் போது ஜனாதிபதி சேவை காலத்தை 6 வருடங்களில் இருந்து 5 வருடங்களாக குறைக்க சர்வ ஜன வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை எனவே இதே வழியில் தமது தரப்பின் காய்நகர்த்தல்களை முன்னெடுக்க ஆதாரமாக இந்நடைமுறையை பயன் படுத்த அரசு தரப்பும் சட்ட வல்லுனர்களும் தீவிரமாக செயற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது
No comments: