News Just In

5/17/2024 04:39:00 PM

இந்திய தேர்தல் முடிவுகளின் பின்னரே இலங்கை தேர்தல் குறித்த அறிவித்தல்கள்?



இந்தியாவில் ஏழு கட்டங்களாக இடம்பெற்று வரும் லோக்சபா தேர்தல்களின் இறுதி வாக்கெடுப்பு ஜூன் முதலாம் திகதி இடம்பெறவுள்ளது. ஜூன் மாதம் 4ஆம் திகதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. பொருளாதாரம் மற்றும் பிராந்திய பாதுகாப்பு விடயங்களில் இலங்கையானது பெருமளவு இந்தியாவில் தங்கியிருப்பதால் அங்கு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஆட்சியமைக்கப்போவது யார் என்பதிலேயே இலங்கையின் அரசியல் நகர்வுகளும் இருக்கும் எனலாம். 

பிரதமர் மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சியே ஆட்சியமைக்கும் என எதிர்ப்பார்க்கின்ற நிலையில் அது உறுதியாகும் வரை ஜனாதிபதி ரணில் பொறுமை காக்கின்றாரோ தெரியவில்லை. இலங்கையின் அரசியல் விவகாரங்களை மிக உன்னிப்பாக பார்த்துக்கொண்டிருக்கும் இந்தியாவானது சில நேரங்களில் இங்கு எப்போது எந்த தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்பதை மறைமுகமாக தீர்மானிக்கும் நாடாகவும் இருக்கலாம்

No comments: