News Just In

5/11/2024 04:23:00 PM

அட்டாளைச்சேனை பிரதேச பாடசாலைகள் மற்றும் பொது அமைப்புக்களை மேம்படுத்த ஹரீஸ் எம்.பி நிதி ஒதுக்கீடு !



நூருல் ஹுதா உமர்
அட்டாளைச்சேனை பிரதேச சபை மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச செயலக நிர்வாகத்தின் கீழுள்ள பாலமுனை பிரதேச பொது நிறுவனங்கள், பள்ளிவாசல்கள் மற்றும் பாடசாலைகளுக்கு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டுக்கான ஆவணம் அட்டாளைச்சேனை பிரதேச சபை முன்னாள் உப தவிசாளர் எஸ்.எம்.எம். ஹனீபா அவர்களின் ஏற்பாட்டில் இன்று (11) பாலமுனையில் வைத்து கையளிக்கப்பட்டது.

அட்டாளைச்சேனை பிரதேச சபை முன்னாள் உப தவிசாளர் எஸ்.எம்.எம். ஹனீபா அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் வட்டாரத்தில் அமைந்துள்ள கமு/அக்/தாருள் ஹசனாத் வித்தியாலயம், கமு/அக்/ அல்-ஹிதாயா மகளிர் கல்லூரி, இப்னு சீனா கனிஷ்ட கல்லூரி, பாலமுனை முனவ்வறா பள்ளிவாசல், பெண்கள் கிராம அபிவிருத்தி சங்கம், மரூன் விளையாட்டு கழகம், அரபா விளையாட்டு கழகம், SEDO அமைப்பு, ஹில்ப் சமூக சேவைகள் அமைப்பு, சிலோன் சரிட்டி, ரியாளுள் ஜன்னா ஜும்மா பள்ளிவாசல், ட்ரை ஸ்டார் விளையாட்டு கழகம், எவர் கிரீன் விளையாட்டு கழகம், இஹ்லாஸ் சணசமூக நிலையம் போன்றவற்றுக்கான நிதி ஒதுக்கீட்டு ஆவணத்தை அந்தந்த நிறுவனங்களின் தலைவர்களிடம் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் இன்று வழங்கி வைத்தார்.

இதன்போது பாடசாலை அதிபர்கள், பாராளுமன்ற உறுப்பினரின் ஆலோசகர்களான எம்.ஜே.எம். அன்வர் நௌஷாத், ஏ. கலீலுர் ரஹ்மான், மக்கள் தொடர்பாடல் செயலாளர் யூ.எல்.என். ஹுதா உமர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர்கள், பொது அமைப்புக்களின் பிரதானிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் முஸ்லிங்களின் அபிலாசைகள், முஸ்லிங்களின் அரசியல் போக்குகள், பாலமுனை அபிவிருத்தி மற்றும் பிராந்திய மக்களின் தேவைகள், முஸ்லிங்களுக்கு இருக்கும் சவால்கள், தீர்வுகள் பெற எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், பொருளாதார மேம்பாடு தொடர்பில் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.

No comments: