
இலங்கை தமிழரசு கட்சியின் (ITAK) விசேட கலந்துரையாடல் ஒன்று திருகோணமலை – ஈச்சிலம்பற்று பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பேச்சுவார்த்தையானது, இன்று (12.05.2024) சென்பக அம்மன் ஆலயத்தில் நடைபெற்றுள்ளது.
இதன்போது, விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் கட்சி நடவடிக்கைகள் தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, கட்சியின் முன்னெடுப்புக்கள் தொடர்பிலும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், அக் கட்சியின் திருகோணமலை மாவட்டத்திற்கான அமைப்பாளர் ச. குகதாசன் தலைமை தாங்கியுள்ளதுடன் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன்) உட்பட கட்சி ஆதரவாளர்கள் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.
No comments: