News Just In

4/18/2024 01:18:00 PM

கோட்டாபயவினால் நான் ஏமாற்றப்பட்டுள்ளேன் – பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்!



கோட்டாபயவினால் நான் ஏமாற்றப்பட்டுள்ளேன் – பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்! முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வாக்குறுதியினால் தான் ஏமாற்றப்பட்டதாக, கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

நேற்று (17) செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஆட்சிக்கு வந்த பின்னர் ஏப்ரல் – 21 பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்படும் என, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனக்கும் பேராயர் சபைக்கும் வாய்மொழியாக வாக்குறுதியளித்தார்

எவ்வாறாயினும், ஏப்ரல் – 21 பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை கிடைத்த பின்னர், அது தொடர்பான அனைத்து விசாரணைகளும் கைவிடப்பட்டதாக பேராயர் தெரிவித்துள்ளார்.

No comments: