News Just In

4/03/2024 08:00:00 PM

கொழும்பு விமானநிலையத்தில் விசாரணையின் பின்னர் விடுதலை !





கொழும்பை வந்தடைந்த முருகன் ரொபேர்ட்பயஸ் ஜெயக்குமார் மூவரையும் கொழும்பு விமானநிலையத்தில் பலமணிநேரம் விசாரணை செய்த அதிகாரிகள் சில நிமிடங்களிற்கு முன்னர் அவர்களை விடுதலை செய்தனர்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு 33 ஆண்டுகள் வரை சிறையிலிருந்து கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் விடுவிக்கப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முருகன் ரொபேர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் இன்று காலை இலங்கையை வந்தடைந்தனர்

திருச்சி சிறப்பு முகாமிலிருந்து நேற்று இரவு 11.15 மணிக்கு சென்னைக்கு காவல்துறை வாகனம் மூலம் அழைத்து வரப்பட்டனர்.

இதன்படி இன்று முற்பகல் 10 மணியளவில் சென்னை விமான நிலையத்திலிருந்து அவர்கள் இலங்கை நோக்கி பயணித்தனர்.மூவரும் காலை 11.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

No comments: