நூருல் ஹுதா உமர்
பிரதேச மட்டங்களில் காணப்படும் பாலின அடிப்படையிலான வன்முறைகளை தடுப்பதற்கான ஒரு பொறிமுறையை உருவாக்கும் நோக்கில் பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பு இறக்காமம் பிரதேசத்தில் உள்ள பொறுப்புவாய்ந்த அரச, சமூக மட்ட தலைவர்கள் பொறுப்புவாய்ந்த உத்தியோகத்தர்களின் பங்கேற்புடன் பிரதேச மட்டத்தில் பாலின அடிப்படையிலான வன்முறைகளைத் தடுப்பதற்கான பிரதேசமட்ட செயற்பாட்டு அணி (Divisional Task Force for Prevention of Sex & Gender Based Violence) ஒன்றினை நிறுவி அதனூடாக சேவைநாடிகளுக்கு உதவி வருகின்றது.
இச்செயலணி மூலம் பாலின அடிப்படையிலான வன்முறைகளை தடுப்பதற்கான வேலைத்திட்டங்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கான பாதுகாப்பு, சட்ட உதவிகள், அவர்களது உடல் நலம், அவசர உதவிகள், சமூக பொறுப்புக்கூறல் மற்றும் பல்துறைசார்ந்தவர்களையும் ஒருங்கிணைத்து அவர்களுக்கான சேவைகளை வழங்கி வருகின்றது.
இறக்காமம் பிரதேசத்திற்கான பாலின அடிப்படையிலான வன்முறைகளைத் தடுப்பதற்கான செயலணி (SGBV Task Force) இன் விஷேட அமர்வு பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் (பதில்) எம்.எம்.கே. சாஜிதா அவர்களின் ஒருங்கிணைப்பில் இறக்காமம் பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல். ஹம்சார் தலைமையில் பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
இவ் அமர்வில், பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பின் நிகழ்ச்சி திட்ட உத்தியோகத்தர்களான எஸ். கங்கேஷ்வரி, ஞா. உசா நந்தினி மற்றும் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் ஏ.ஜி. நிசம்மா, பொது சுகாதார பரிசோதகர் ஏ.எல். ஜௌஸ், மதீனா பாடசாலை அதிபர் எம்.ஐ. ஜௌபர், பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவு உத்தியோகத்தர்கள், பிரதேச பிரதான பள்ளிவாசல் தலைவர்கள், இறக்காமம் பொலிஸ் நிலைய பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவு, , மகளிர் சங்க பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.
No comments: