News Just In

3/23/2024 07:55:00 AM

மட்டக்களப்பில் வறிய குடும்பங்களுக்கு ரமழான் நிவாரண உதவி வழங்கப்பட்டது!



(மட்டக்களப்புமொகமட் தஸ்ரிப் லத்தீப்)

புனித ரமழான் காலத்தை முன்னிட்டு கிழ க்கு மாகாணத் தில் பல்வேறு நிறுவனங்கள் தற்பொழுது ரமழான் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றது .

இதன் அடிப்படையில்ஐக்கிய தேசியக்கட்சியின் மட்டக் களப்பு மாநகர வலய அமைப்பாளர் அலுவலகம் மட்டக்களப்பு நகர ஜாமியுஸ் சலாம் ஜும்மா பள்ளிவாசல் நிருவாகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த ரமழான் நிவாரண உதவி பொருட்கள் வழங்கும் நிகழ்வுஇன்று மாலை இப் பள்ளிவாசலில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில். ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாநகர வலய அமைப்பாளர்பீ.ரீ.அப்து ல்லத்தீப்,கல்குடா தொகுதிசெயல்பாட்டுகுழு உறுப்பினர்.எல்.ரீ.புர்ஹான் இப்பள்ளிவாசலின் நிருவாகசபை பொருளாளரும் பிரதம கணக்காளருமான எம்.ஏ. முகமது சுஹைர்,மாவட்ட செயலக பிரதம கணக்காளர். எம்.பஸீர், மற்றும் பல நிர்வாகிகளும் கலந்து சிறப்பித்தனர்.

இதன் போது மட்டக்களப்பு மாநகர பிரிவில் வசிக்கும் வறி ய குடும்பங்களுக்கு ரமழான் நிவாரண உணவுப்பொ திகள் வழங்கி வைக்கப்பட்டன.

No comments: