News Just In

3/24/2024 07:17:00 PM

ஜனாதிபதியின் 75 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகரபிரிவில் முஸ்லிம்களின் பிரார்த்தனை வழிபாடும் மரம் நாட்டு விழாவும்

(மட்டக்களப்புமொகமட் தஸ்ரிப்


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் 75 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்றன .

இதற்ககமைய ஐக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பு மாநகர மஞ்சந் தொடுவாய் நாவற் குடா வலய பிரிவில்விசேட மரம் நடுகைமற்றும் பழமரக்கன்று கள்விநியோகமும் இடம்பெற்றது பூநொச்சிமுனை ஜும்மா பள்ளிவாசல் வளவில் இந்த மரநடுகை இடம் பெற்றது.

இங்கு ஜனாதிபதிக்கு நல்லாசி வேண்டியும் நாட்டின் பொரு ளாதார நெருக்கடி நீங்கவும் நாட்டில் நல்லாட்சி நிலைத்திருக்கவும் சமூகங்களுக்கிடையில் நல்லுறவு, காஸா மக்களுக்கு ஈடேற்றம் வேண்டியும் விசேட துவா பிரார்த்தனை நிகழ்வும்இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சி கட்சியின் மட்டக்களப்பு மாநகர பிரிவின் வலய அமைப்பாளர்பீ.ரீ.அப்துல் லத்தீப். பிரதமஅ திதியாகக் கலந்துகொண்டு இந்த விசேட மர நடு கையை யும் பழமரக்கன்றுகள் விநியோகத்தையும் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சி கட்சியின் காத்தான்குடி பிரதேச வலய அமைப்பாளர் எம்.எஸ்.உமர்லெப்பை பூநொச்சிமுனை ஜும்மா இப்ப பள்ளிவாசல் நிர்வாகத்தின் பொருளாளர்எஸ்.எம். உவைஸ் பேஷ் இமாம் எம்.ஐ.எம்.இச்மாக் பலாஹி உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்






No comments: