News Just In

2/18/2024 06:20:00 AM

சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கான முதலீட்டாளர்களுடன் மட்டக்களப்பில் விசேட கலந்துரையாடல்!





மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் முதலீட்டாளர்களுடனான விசேட கலந்துரையாடலொன்று மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் (16) இடம் பெற்றது.

இந் நிகழ்வில் கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தின் தவிசாளர் பி.மதனவாசன் கலந்து கொண்டதுடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்து உள்ளூர் மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்கான செயற்திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பாக இதன் போது முதலீட்டாளர்களுடன் கலந்துரையாடப்பட்டது.

கடற்கரையை அண்மித்த பகுதிகளில் சுற்றுலா விடுதிகள், உணவகங்கள் போன்றவற்றை அமைத்தல் மற்றும் முகத்துவாரத்தில் அமைந்துள்ள வெளிச்ச கோபுரத்தை புனரமைப்பு செய்தல் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

இக் கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஶ்ரீகாந்த், 243 ஆம் படைப்பிரின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சன்டிம குமாரசிங்க, மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் எந்திரி.சிவலிங்கம், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஆர். ஜதிஸ்குமார், துறைசார் நிபுணர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டன

No comments: