News Just In

2/09/2024 03:21:00 PM

மக்களின் உயிர்களோடு விளையாடிய மகிந்தவின் செல்லப்பிள்ளை!



நெருக்கடி காலத்திலேயே மக்கள் உயிர்கள் மீதே அக்கறையின்றி செயற்பட்ட கெஹலிய போன்ற நபர்கள், சாதாரண காலகட்டத்தில் எப்படியெல்லாம் ஊழல்களில் ஈடுபட்டிருப்பார்கள் என்ற கேள்வி நாட்டின் அனைத்து மக்களின் மனதிலும் தோன்றியுள்ளது.

 மகிந்த ராஜபக்ஷவின் பாசறையில் கற்ற ஊழல் வித்தைகளை வெளிப்படுத்துவதற்கு அவர் சுகாதார அமைச்சையும் நாட்டு மக்களின் உயிர்களையுமே பணயம் வைத்திருக்கிறார். இது கிட்டத்தட்ட கொலைக் குற்றச்சாட்டுக்கு இணையானது. அதை கண்டும் காணாதது போன்று இருந்த ராஜபக்ஷக்கள் மீதான வெறுப்பும் அதிகரித்துள்ளது என்று தான் கூற வேண்டியுள்ளது. மேலும் கெஹலியவுக்கு அதிகபட்ச தண்டனையை நீதித்துறை வழங்க வேண்டுமென நாட்டு மக்கள் எதிர்ப்பார்க்கின்றனர். அதற்கான அழுத்தங்களை சிவில் சமூகங்கள் வழங்க வேண்டுமெனவும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

No comments: