News Just In

2/13/2024 07:53:00 PM

பொதுச் செயலாளர் தெரிவு ஒரு இணக்கமான முறையில் சுமுகமாக முடிவுக்குக் கொண்டுவரப்படும் ! ஞானமுத்து சிறிநேசன்


இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவு ஒரு இணக்கமான முறையில் சுமுகமாக முடிவுக்குக் கொண்டுவரப்படும் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு செட்டிபாளையத்தில் நேற்று(12.02.2024) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் பதவிக்காக அடிபடாமல் அதனைச் சுமுகமான முறையில் தீர்த்துக் கொள்வதற்கான ஒரு இணக்கமான ஒரு விடயம் எட்டப்பட்டிருக்கின்றது. இதனை எமது ஆதரவாளர்கள் பலருடன் பேசிய பின்னர் அது தொடர்பில் கருத்துக்களை வெளியிடுவோம்.

No comments: