News Just In

2/13/2024 10:58:00 AM

சாய்ந்தமருதில் உத்தியோகத்தர்கள் கௌரவிப்பு!





நூருல் ஹுதா உமர்
சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக கடமையாற்றி ஓய்வுபெற்றுச் சென்ற கே ஆதம்பாவா, எம்.நபார் மற்றும் சமுர்த்தி முகாமையாளராக பதவியுயர்வு பெற்ற எம்.எம்.எம்.முபாறக் ஆகியோருக்கான கௌரவிப்பு நிகழ்வு நேற்று (11) சாய்ந்தமருது சமுர்த்தி வங்கி சங்க கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் சமுர்த்தி தலைமைப்பீட சிரேஷ்ட முகாமையாளர் ஏ.சி.ஏ. நஜீம் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரும் சமுர்த்தி மாவட்ட பதில் பணிப்பாருமான வி. ஜெகதீசன், கௌரவ அதிதியாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் உள்ளிட்ட சமுர்த்தி வங்கி சங்க முகாமைத்துவ பணிப்பாளர் றியாத் ஏ. மஜீத், வங்கி முகாமையாளர் ஐ.எல்.சித்தி ஹிதாயா கருத்திட்ட முகாமையாளர் எஸ்.றிபாயா, சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது ஓய்வு மற்றும் பதவியுயர்வு பெற்ற சென்ற உத்தியோகத்தர்களுக்கு நினைவுச் சின்னம் மற்றும் அன்பளிப்புகள் என்பன அதிதிகளால் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

No comments: