News Just In

2/19/2024 05:45:00 AM

யாழில் 300 ஏக்கர் விவசாய காணிகளை விடுவிக்க இராணுவம் இணக்கம்!





யாழில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த 300 ஏக்கர் விவசாய காணிகளை விடுவிக்க இராணுவத்தினர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

யாழில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஒரு மாத காலத்துக்குள் சாதகமான பதிலை வழங்குமாறு இராணுவத்தினருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டிருந்த நிலையிலேயே, 300 ஏக்கர் விவசாய நிலத்தினை விடுவிப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில் வறுத்தலைவிளான் , காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரி வீதி இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டுள்ளதோடு, பலாலி கிழக்கு பகுதியில் உள்ள காணிகளை விடுவிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments: