News Just In

1/26/2024 02:12:00 PM

வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்தியில் நாளை முதல் வானிலை மாற்றம்!





வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய மாகாணங்களில் தற்போது நிலவும் வரட்சியான வானிலையில் நாளையிலிருந்து (27) மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ, மேல், ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது

No comments: