
ஹபரனையில் வான் மற்றும் லொறி ஒன்றுடன் ஒன்று மோதியதில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
மட்டக்களப்பு நோக்கி சென்ற வான் லொறி ஒன்றுடன் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து நேற்று (08.01.2024) இரவு இடம்பெற்றுள்ளது.
இதன்போது படுகாயமடைந்த நால்வரும் அதிதீவிர நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இந்த விபத்து சம்பவம் தொடர்பில் ஹபரனை பொலிஸாருக்கு கிடைத்த அழைப்பையடுத்து விசாரணைகளை முன்னெடுக்க சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
No comments: