News Just In

11/12/2023 03:41:00 PM

அடிப்படை வாழ்வியலாதரவு மற்றும் முதலுதவி பயிற்சி செயலமர்வு!





நூருல் ஹுதா உமர்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் தொற்றா நோய் பிரிவின் ஏற்பாட்டில் பிராந்திய வைத்தியசாலைகளின் வைத்திய அதிகாரிகள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கான "Basic Life Support and First Aid" தொடர்பான பயிற்சி செயலமர்வு (11) பிராந்திய பணிமனை கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.

இப்பயிற்சி நெறியானது பிராந்திய பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் தொற்றா நோய் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ஐ.எம்.எஸ்.இர்சாத் அவர்களின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்றது.

பிராந்திய திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம். மாஹிர் உரையாற்றி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் விபத்துக்கள் மற்றும் அவசர சிகிச்சை பிரிவு பிரதானியும், கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளருமான டொக்டர் ஆர்.ராஜவர்மன் வளவாளராகக் கலந்துகொண்டு மூச்சுத்திணறல், மயக்கம், அதிர்ச்சி, மாரடைப்பு, எலும்பு முறிவு, நீரில் மூழ்குதல், விஷக்கடிகள், வலிப்பு, எரிகாயங்கள், தலையில் காயங்கள் ஏற்படும் பாரதூரமான நிலைமைகளின்போதும், ஆபத்து நிலைமைகளின் போதும் பாதிக்கப்படுபவர்களுக்கு முதலுதவி வழங்குவது தொடர்பில் செய்முறைப் பயிற்சிகளின் ஊடாக விரிவுரையாற்றினார்.


No comments: