பண்டாரகம ஹத்தாகொட பகுதியில் நபரொருவர் தன்னுடன் சேர்த்து, தனது முச்சக்கர வண்டிக்கும் தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்தில் படுகாயமடைந்த 54 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை, தற்போது ஹொரணை ஆரம்ப வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார் என தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது குறித்த நபரின் முச்சக்கரவண்டியும் தீயில் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் குடும்ப தகராறு காரணமாக அந்நபர் இத்தவறான முடிவினை எடுத்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
No comments: