News Just In

7/13/2023 06:40:00 AM

ஏறாவூர் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த துபாய் நாட்டின் உதவியில் அமைச்சர் நசீர் வேண்டுகோளில் பல்வேறு திட்டங்கள் அமுல்!

சுற்றாடல் அபிவிருத்தி அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி இணைப்பு குழு இணைத்தலைவருமான அல்ஹாஜ் நசீர் அஹமத் எடுத்துக் கொண்ட பெரு முயற்சியின் பயனாக துபாய் நாட்டு உதவியில் ஏறாவூர் பிரதேச வறிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த பல அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்பட வுள்ளன.

இந்தத் திட்டத்தின் மூலம்ஏறாவூர் பிரதேசத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல சுய தொழில் திட்டங்கள் அமைச்சர் நசீர் அகமட்டினால் முன்வைக்கப் பட்டுள்ளன

இத் திட்டங்களின் திட்டமிடுதலை மேற்கொள்ளும் பொருட்டு அமைச்சர் நசீர் அகமதின் வேண்டுகோளின்பேரில்பேரில் துபாய் நாட்டுப் பிரதிநிதி கள் நேற்று ஏறாவூர் பகுதிக்கு விசேட ஹெலிகாப்டர்மூலம் வருகைதந்த னர்.ஏறாவூர் பிரதேசத்தின் எல்லைப்புறகிராம பிரதேசங்களுக்கு சென்று மக்களின் வாழ்வாதார நடவடிக்கைகள் பற்றி ஆராய்ந்து மக்களுடன் கலந்துரையாடி தேவைகள் பற்றி கேட்டு அறிந்து கொண்டனர்.

இத்திட்டத்தின் ஊடாக பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு கோழி ,ஆடு, மாடு வளர்ப்பு விவசாய செய்கைகள் மீன் வளர்ப்பு உட்பட பல்வேறு சுய தொழில் திட்டங்கள் பற்றி பிரதேச மக்களால் தனது கோரிக்கைகள் துபாய் நாட்டுப் பிரதிகளுக்கு முன் வைக்கப்பட்டன.

இந்த துபாய் நாட்டு உதவித் திட்டத்தில் ஏற்கனவே அமைச்சர் நஷீர் அஹமட்டின் வேண்டுகோளில் மேற்கொள்ளப்பட்டு வந்த திட்டங்களின் முன்னேற்றங்கள் பற்றியும் துபாய் நாட்டுப் பிரதிநிதிகள்நேரில் கண்டறிந்த துடன் அதன் வளர்ச்சி பபற்றியும் விசேட கலந்துரை யாடல்களை நடத் தினர்.

(மட்டக்களப்புமொகமட் தஸ்ரிப் லத்தீப்)

No comments: