மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள 27 பாடசாலைகளைச் சேர்ந்த வறிய மாணவர்கள் 400 பேருக்கு சுற்றாடல் அமைச்சரினால் புத்தகப் பைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
அந்த வலயத்திலுள் காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி ஆகிய கல்விக் கோட்டங்களைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட வறிய மாணவர்களுக்கு இந்த புத்தகப் பைகளை விநியோகிப்பதற்காக அந்தந்தப் பாடசாலைகளின் அதிர்களிடம் புத்தகப் பைகள் சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட்டினால் கையளிக்கப்பட்டன.
ஏறாவூர் நகர சபை மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வலயக் கல்விப் பணிப்பாளர் உட்பட கல்வி அதிகாரிகளும் அதிபர்களும் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
No comments: