கதுருவெலயிலிருந்து கல்முனை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஞாயிற்றுக்கிழமை(09.07.2023) மன்னம்பிட்டி பகுதியில் அமைந்துள்ள கொட்டலி பாலத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது…
மன்னம்பிட்டி பேருந்து நிலையத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணிக்கு கல்முனை நோக்கி தனியார் பேருந்து பணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டுள்ளது. இந்நிலையில் மன்னம்பிட்டி பிரதான வீதியில் அமைந்துள்ள கொட்டலி எனும் பாலத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் இதுவரையில் 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 40 இற்கு மேற்பட்டோர் காயங்களுக்குட்பட்டதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் 8 பெண்களும்,3 ஆண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர்களின் உடல்களும், காயம்பட்டவர்களும், பொலன்நறுவை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்னதாகவும், அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் ஸ்தலத்திற்கு விரைந்த பொலிராரும், பொதுமக்களும், பேருந்தில் அகப்பட்டுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
No comments: