News Just In

5/17/2023 11:27:00 AM

காலநிலையில் மாற்றம்-வளிமண்டலவியல் திணைக்களம்!




பல பகுதிகளில் வெப்பமான காலநிலை தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி இன்று (புதன்கிழமை) வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் சில இடங்களிலும் வெப்பச் சுட்டெண் உயர்வு மட்டத்தில் காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக நீரிழப்பு மற்றும் தசைப்பிடிப்பு ஏற்படலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. .

இதேவேளை, மேல், சப்ரகமுவ, வடமேற்கு, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும்

அத்துடன் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது

No comments: