News Just In

5/17/2023 10:47:00 AM

காரைதீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நடமாடும் சேவை ! மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு!!



(நூருல் ஹுதா உமர்)

காரைதீவு பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுமக்கள் நடமாடும் சேவை செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 3.30 மணி வரை காரைதீவு பிரதேச செயலக முன்றலில் பிரதேச செயலாளர் எஸ். ஜெகராஜன் தலைமையில் இடம் பெற்றது.

இந்நடமாடும் சேவையில் காணி, சமூக சேவைகள் ,சமுர்த்தி, மோட்டார் போக்குவரத்து, திட்டமிடல் ,கலாசாரம், மகளிர் அபிவிருத்தி, தேசிய அடையாள அட்டை, பொலிஸ், தேசிய வீடமைப்பு அதிகார சபை, மின்சார சபை, கமநல சேவைகள் நிலையம், வனவிலங்கு, பதிவாளர் திணக்களம் மற்றும் கமநல சேவைகள், சுகாதாரம் போன்ற திணைக்களம் மற்றும் பிரிவுகள் கலந்து கொண்டு பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் காரைதீவு, மாளிகைக்காடு, மாவடிப்பள்ளி பிரதேசத்திலுள்ள பொது மக்கள் பலரும் கலந்து கொண்டு தங்களது தீர்க்கப்படாத நீண்ட கால பிரச்சினைகளை முன் வைத்து தீர்வுகளைப் பெற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்வில் காரைதீவு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எஸ். பார்த்திபன், உதவி திட்டமிடல் பணிப்பாளர் வீ. இராஜகுலேந்திரன், கணக்காளர் ஏ.எல்.எப்.ரிம்ஸியா, நிர்வாக உத்தியோகத்தர் ரி. கமலநாதன் நிருவாக கிராம உத்தியோகத்தர், சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர், பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர்கள் உட்பட கிராம உத்தியோகத்தர்கள் சமுர்த்தி மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


No comments: