கனடாவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், ஜமெய்க்காவில் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
28 வயதான ஜெடா பவுலின் வைட் ஹெட் என்ற பெண்ணே இவ்வாறு அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணுக்கும் கணவருக்கும் இடையில் முரண்பாட்டு நிலை ஏற்பட்டிருந்தது என தெரிவிக்கப்படுகின்றது.
இதன் போது கணவர், தாக்கியதில் காயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் ஒருவரை கைது செய்துள்ளதாக ஜமெய்க்கா அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பூரண விசாரணை நடத்தி குற்றச் செயலில் ஈடுபட்ட அனைவரும் தண்டிக்கப்பட வேண்டுமென குடும்பத்தினர் கோரியுள்ளனர்.
இந்த மரணத்தில் மர்மம் நிலவி வருவதாகவும் சரியான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது.
No comments: